அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிராணிகளைப் போலவே ஒலி எழுப்புகின்ற அபார திறமையைப் பெற்று இருக்கின்றார். கிட்டத்தட்ட எல்லா மிருகங்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் குரல்களில் இவரால் மிகவும் சாதாரணமாக ஒலி எழுப்ப இயலும். இவர் ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்றவர். கல்லூரி நண்பிகள்தான் இவரின் திறமையை அடையாளம் கண்டனர். நாடு திரும்பிய பிற்பாடு இவ்வீடியோவை வெளியிட்டு உள்ளார்.